ஆனந்தக்களிப்பு
பல்லவி
பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சாபங்கொடுத்திட லாமோ - விதிகோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.பாப
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம். = பாப
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம். = பாப
நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். | பாப | |||||||||||||||||||||||||||||
நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. | பாப | |||||||||||||||||||||||||||||
தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ் சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத் திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே. | பாப | |||||||||||||||||||||||||||||
நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. | பாப | |||||||||||||||||||||||||||||
நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம் நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. | பாப | |||||||||||||||||||||||||||||
வேத விதிப்படி நில்லு - நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. | பாப | |||||||||||||||||||||||||||||
பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே இச்சைய துன்னை யாளாதே - சிவன் இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. | பாப | |||||||||||||||||||||||||||||
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
|
பாரி லுயர்ந்தது பத்தி - அதைப் பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ் சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. | பாப |
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர மானந்தத் தேவின் அடியினை மேவி இன்பொடும் உன்னுட லாவி - நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. | பாப |
ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற் கான வழியை யறிந்து நீ கொண்டு சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு. | பாப |
ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத் தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம் வான்கதி மீதிலே நாட்டம் - நாளும் வையி லுனக்கு வருமே கொண் டாட்டம். | பாப |
எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. | பாப |
இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும் இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன் சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. | பாப |
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப் போதகர் சொற்புத்தி போதவோ ராதே மைவிழி யாரைச்சா ராதே - துன் மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. | பாப |
வைதோரைக் கூடவை யாதே - இந்த வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே |
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை வீணில் பறவைகள் மீதிலெய் யாதே. | பாப |
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. | பாப |
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன் பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன் வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே. | பாப |
போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப் புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர் தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே. | பாப |
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே. | பாப |
பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி சத்திய மென்றதை யீட்டி - நாளுந் தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. | பாப |
செப்பரும் பலவித மோகம் - எல்லாம் சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம் ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய் ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். | பாப |
எவ்வகை யாகநன் னீதி - அவை எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி ஒவ்வாவென்ற பல சாதி - யாவும் ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. | பாப |
கள்ளவே டம்புனை யாதே - பல கங்கையி லேயுன் கடம்நனை யாதே கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக் கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே. | பாப |
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன் துங்க அடியவர் தாசன் - தன்னைத் துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன். | பாப |